பையனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய மருமகளை கொலை செய்த கொடூர குடும்பம்

x

டெல்லியில் லிவ் இன் உறவில் இறந்த பெண்ணை கொலை செய்வதற்கு, காதலனின் தந்தையே உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நிக்கி யாதவ் என்ற இளம்பெண்ணை கொலை செய்து, உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் சாஹில் கெலாட் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2020ம் ஆண்டே நிக்கி யாதவை சாஹித் கெலாட் திருமணம் செய்ததும், அதற்கு சாஹித் கெலாட்டின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. முதல் திருமணத்தை மறைத்து சாஹில் கெலாட்டிற்கு 2வது திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்த போது நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், நிக்கி யாதவை கொலை செய்ய, சாஹில் கெலாட்டிற்கு அவரது தந்தையே உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக சாஹில் கெலாடின் தந்தை உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்