டெல்லியில் தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

x

டெல்லியில் நடைபெறும் தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.

தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய நீர் மேம்பாட்டு முகமை சார்பில் நதிநீர் இணைப்பு தொடர்பான அடுத்த கட்ட ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறைசெயலர் சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்