டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! - முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x
  • டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்புகளை கண்காணித்து வருவதாகவும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
  • கடந்த சில தினங்களில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும், அவர்கள் மூவரும் பிற இணை நோய் உள்ளவர்கள் என்றும் கூறினார்.
  • அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் இணைப்பு உள்ளிட்டவை இருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
  • கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்