காஷ்மீரில் பாதுகாப்பு துறை அமைச்சர் - தேடி தேடி வேட்டையாடும் ராணுவம்

x

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் இன்று ரஜோரி சென்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்...

ஜம்மு காஷ்மீர், பஞ்சி மாவட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள், ரஜோரி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. சோதனை நடத்திய போது, தீவிரவாதிகள் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திலேயே 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். 4 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிகிச்சை பலனின்றி மேலும் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ரஜோரியில் இணையவசதி துண்டிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. அப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்