ஆளுநருக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் "கருத்துகளை திரும்பப் பெறுக" அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார்
- குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுடன் அண்மையில் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், வெளிநாட்டு நிதியுதவியுடன் இந்த போராட்டங்கள் நடந்ததாகவும் தெரிவித்தார்.
- இதுமுற்றிலும் உண்மைக்குப்புறம்பான தகவல் என கூறி, அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார், அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- அதில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், சட்ட தீர்வுகளை நாடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story