"அரசாணை எண் 152ஐ ரத்து செய்ய வேண்டும்"தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Madurai Protest

x

தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்கு எதிரான அரசாணை 152ஐ ரத்து செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவமனை சாலையில் கூடிய அவர்கள்,

அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். பின்னர்

சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்ரகளை, காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார்

இழுத்து சென்று கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்