ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2ம் தேதி பாலாசூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 289 பேர் உயிரிழந்த‌தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழப்பு 290ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்களில் 81 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. 78 குடும்பங்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், ஆய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்