சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலைமிரட்டல்... பாஜக நிர்வாகி அதிரடி கைது..!

x

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, தன்னை மிரட்டியதாக பாஜக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், சபரிமலைக்கு சென்று திரும்பிய பாஜக மாவட்ட துணைத் தலைவரை, பம்பையில் போலீசார் கைது செய்தனர். பாஜக கடலூர் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவராக உள்ள பரத் என்பவர், ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை முற்றுகையிட்டு அதிருப்தியை தெரிவித்துள்ளார். பின்னர் பாஜக மாவட்ட துணைத் தலைவரான கோபிநாத், தகாத வார்த்தைகளால் பேசியதுடன் பரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்