பள்ளி வளாகத்தில் கிடந்த சடலம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி

x

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, பழங்குடியின இளைஞர், குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நந்தியம்பாக்கம் இருளர் காலணியை சேர்ந்த 19 வயதாகும் மணிகண்டன் என்பவர், கூலி வேலை செய்து வந்தார். இவர் அவ்வப்போது மதுபோதையில் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றிரவு தகராறில் ஈடுபட்ட மணிகண்டன், வீட்டில் இருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், இன்று காலை நந்தியம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில், மணிகண்டன் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்