கல்லூரிக்கு செல்லும் மகள்...கண்ணீர் விட்டு அழுத தந்தை - நெகிழ்ச்சி காட்சிகள்

x

பள்ளி செல்ல அச்சப்பட்டு குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுது பார்த்திருப்போம்.

ஆனால், டெல்லியில் கல்லூரி செல்லும் மகளின் பிரிவு தாங்காமல் தந்தை கண்ணீர் விட்டு அழுத சம்பவம், பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இன்ஸ்டகிராமில் பிரக்‌ஷா என்ற மாணவி பகிர்ந்த வீடியோவில், தனது கனவான டெல்லியில் உள்ள மிரண்டா ஹவுஸ் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளதாகவும், கல்லூரிக்கு சென்ற முதல் நாள் தன்னை வழியனுப்ப வந்த தந்தை கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறியுள்ளார்.

தந்தையின் கண்ணீர் தனக்கான அங்கீகாரத்தை காட்டுவதாக குறிப்பிட்ட பிரக்‌ஷா, பெற்றோரின் மகிழ்ச்சிக்காக எதுவும் செய்ய தயார் என கூறியுள்ளார்.

தந்தை, மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் வீடியோவுக்கு நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் வரை நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்