இருசக்கர வாகன விபத்தில் மகள் உயிரிழப்பு - மன உளைச்சலில் தந்தை விபரீத முடிவு

x

திருவாரூரை அடுத்த கங்களாஞ்சேரியைச் சேர்ந்த அற்புதராஜ், தனது மகள் ஜாஸ் மேரி, தோழி ரிஷிதா ஆகியோ பள்ளி முடிந்து திருவாரூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அப்போது எதிரில் வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது அவர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த மூவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஜாஸ்மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அற்புதராஜ், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்