17 கோடி இந்தியர்களின் அந்தரங்கம்.. நாட்டையே அதிரவைத்த 7 பேர் - இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய தகவல் திருட்டு

x
  • தகவல் திருட்டு மற்றும் விற்பனை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதி குற்றதடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • அப்போது, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை அவர்கள் கைது செய்தனர்.
  • அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று நிறுவனங்களை ஏற்பாடு செய்து, ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள், பொதுமக்களின் செல்போன் எண்கள், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடி விற்றது தெரிய வந்த‌து.
  • இதுவரை அவர்கள் 16 கோடியே 80 லட்சம் நபர்களின் தனிப்பட்ட விவரங்களை, திருடி விற்பனை செய்திருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.
  • 7 பேரிடம் இருந்தும், ஆதார் அட்டைகள், செல்போன்கள், திருடப்பட்ட தகவல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்