நண்பனின் தலையில் கத்தியால் வெட்டு... முன்விரோதத்தால் நடந்த சம்பவம் - 2 பேர் கைது

x

தாம்பரத்தில், முன்விரோதம் காரணமாக, கத்தியால் நண்பனின் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீன் ஜோ, சக்திவேல் மற்றும் அருண்குமார். நண்பர்களான இவர்களுக்குள் பிரச்சினை ஏற்படவே, அருண்குமாரை தீர்த்துக்கட்ட பிரவின் ஜோ மற்றும் சக்திவேல் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடப்பேரி அருகில் உள்ள மலைப்பகுதியில் அருண்குமாரை மது அருந்த இருவரும் கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது, பட்டா கத்தியால் அருண்குமாரின் தலையில் பலமாக வெட்டி விட்டு, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், பலத்த காயமடைந்திருந்த அருண்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தப்பியோடிய 2 பேர், மதுரவாயல் வெளிவட்ட சாலையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அவர்களை அங்கு போலீசார் கைது செய்தனர். கைதான இருவர் மீதும் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்