"என் பாதி தலைமுடிய காணோம் ப்ளீஸ் கண்டுபிடிச்சி கொடுங்க சார்" - கதறியபடியே போலீஸ் ஸ்டேஷன் சென்ற பெண்

x

திருமண நிகழ்வில் பங்கேற்ற பெண்ணின் நீண்ட முடியை மர்ம நபர்கள் சிலர் வெட்டிய சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது...

கேரள மாநிலம் கண்ணூர் அருகே கரிவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பட்டதாரி மாணவி ஒருவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் தாயாருடன் பங்கேற்க சென்றார். திருமண நிகழ்ச்சிக்கு பின்பு வீட்டில் வந்து பார்த்தபோது ஆசையாக வளர்த்து வந்த தனது நீளமான தலைமுடியின் ஒரு பகுதியை மர்ம நபர் வெட்டி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன் பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். பின்னர் உடனே பையனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முடியை வெட்டிய மர்ம நபர்கள் யார்? என தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்