இரும்பு கேட்டை தொட்ட உடன் எமனாக பாய்ந்த கரண்ட் - அப்பாவி தம்பதிக்கு நேர்ந்த சோகம்

x

இரும்பு கேட்டை தொட்ட உடன் எமனாக பாய்ந்த கரண்ட் - அப்பாவி தம்பதிக்கு நேர்ந்த சோகம்


சென்னையில் குடியிருப்பின் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி மூர்த்தி. இவரும் இவர் மனைவியுமான ஓய்வு பெற்ற தடயவியல் துறை துணை கண்காணிப்பாளரான பானுமதியும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இவர்கள் வெளியே புறப்படுவதற்கு தயாரான போது குடியிருப்பு கேட்டின் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்