"Current Cut பன்னிட்டாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு..வெளிய வந்தா அரிக்கொம்பன்..உள்ளே இருந்தா ஒரே வெக்கை.."

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், இரவு நேரத்தில் யானையை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், யானை செல்லும் வழித்தடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், அரிக் கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தியும், கும்கி யானைகளைக் கொண்டும் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. யானையை பிடித்த பின்னர், வெள்ளிமலை வனப்பகுதியில் விடுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com