க்யூட் நுழைவுத்தேர்வு.. "தமிழ்நாடு மாணவர்களுக்கு சலுகை" - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

x
  • மத்திய பல்கலைக்கழகங்களுக்கான க்யூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாட்டு மாணவர்கள் 10 ம் வகுப்பு மதிப்பெண்ணை பதிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் க்யூட் நுழைவுத்தேர்வுக்கு, 10 ம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • ஆனால் 2021 -ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 10 வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டிருந்ததால், தமிழக மாணவர்கள் க்யூட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
  • இதனையடுத்து 10ம் வகுப்பு மதிப்பெண்ணை பதிய வேண்டும் என்ற விதியை தளர்த்த கோரிக்கை எழுந்தது.
  • இதனையடுத்து தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் 10 ம் வகுப்பு முடித்த மாணவர்கள், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு மதிப்பெண்களைப் பதியத் தேவையில்லை எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்