இருப்பிடத்தை சூறையாடி பெண்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்திய கும்பல் - கூரையை உடைத்து அராஜகம் - பரபரப்பு காட்சி
- காட்டுமன்னார்கோயில் அருகே இடத் தகாராறில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடலூர் மாவட்டம், பாளையங்கோட்டை கீழ்பாதி என்ற கிராமத்தில் விஜயா என்பவர் சிறிய அளவில் உணவகம் நடத்தி வருகிறார்.
- இவரது உணவகத்தின் பின்புறம் தற்காலிகமாக ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் ஷீட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
- இந்நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், அந்த இடத்தை தங்களுக்கு சொந்தம் எனக் கூறி கட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
- இதன் வீடியோ வைரலாக பரவிய நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story