ஒரு ஊரையே மிரள விடும் முதலைகள்... தண்ணீரில் இறங்க முடியாமல் தவிக்கும் மக்கள்

x

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் முகாமிட்டுள்ள முதலைகளால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக அணைக்கட்டு பகுதியில் முதலைகள் முகாமிட்டுள்ளன. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல், பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்