விடிந்தால் திருமணம்.. அன்று இரவே மண்டபத்தை சூறையாடிய மர்ம கும்பல் - கண்ணில் சிக்கியவரையெல்லாம்..

x

கடலூர் மாவட்டம் பில்லாலித் தொட்டியை சேர்ந்தவர் சவுந்தர். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோட்டப்பக்குப்பம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில், கடலூர் அடுத்த சாலக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் இரு தரப்பு உறவினர்களும் கூடி.. திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். அப்போது திடீரென மண்டபத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், மணமக்கள் உட்பட அவர்களின் உறவினர்கள் மற்றும் மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திடீர் தாக்குதலால், மணமக்கள் செய்வதறியாமல் நிலை குலைந்ததும்... இளம் பிஞ்சுகள் தலையில் ரத்தம் வழிய கதறியதும்... திருமண மண்டபத்தையே போர் களமாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்