மனைவி போல் நடித்து கணவன் செய்த பகீர் காரியம் - பெரும் சிக்கலில் மாட்டிய மனைவி

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தனது கையெழுத்தை போலியாக போட்டு கடன் வாங்கி மோசடி செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மனைவி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டியை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளன. தனது கணவர் அருள்பிரகாசம் என்பவருக்கு, பல பெண்களிடம் தொடர்பு இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 2 ஆண்டுகளாக அவரைபிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் மனைவியின் கையெழுத்தை போட்டு, அருள்பிரகாசம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சூர்யாவுக்கு தெரியவரவே, கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்