இளைஞரை வாட்டிய வயிற்று வலி.. திருமணமான 3 மாதத்தில் பலி

x
  • கடலூரில் திருமணமான மூன்றே மாதத்தில் குடலிறக்க சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் உதயகுமார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், வெளிநாடு சென்று பணிபுரிய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
  • இதற்கான மருத்துவ பரிசோதனையின் போது உதயகுமாருக்கு குடலிறக்க பிரச்னை இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
  • இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை பின்பு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உதயகுமார், திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்நிலையில், இளைஞர் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்