"ஆளு வச்சி அடிச்சுட்டாங்க சார்" ஆட்சியர் காரை விட்டு இறங்கியதும் காலில் விழுந்து கதறி அழுத தம்பதி

x

அபகரித்த நிலத்தை மீட்டுத் தருமாறு ஆட்சியர் காலில் விழுந்து கதறியழுத தம்பதியால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது...

உளுந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயகாந்தன் - சிவகாமசுந்தரி தம்பதி...

கூலித் தொழிலாளியான ஜெயகாந்தனின் வீட்டு மனையை அதே பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் அகினாஸ் அபகரித்ததாகத் தெரிகிறது... இதைத் தட்டிக்கேட்ட தம்பதியை அகினாஸின் ஆதரவாளர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வள்ளலார் அவதார இல்லத்திற்கு ஆட்சியர் பாலசுப்ரமணியன் வந்த போது, அவர் காரை விட்டு இறங்கியதும் கணவனும் மனைவியும் ஆட்சியரின் காலில் விழுந்து தங்கள் வீட்டுமனை பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கதறியழுதனர்.

இது குறித்து முழு விவரம் கேட்டு அறிந்த ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்