மும்பையை வீழ்த்திய சென்னை - ஆட்டநாயகன் விருது வென்ற பதீரனா

x

சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை - மும்பை இடையிலான ஐபிஎல் போட்டியில், ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பதீரனா வென்றார். 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பதீரனா, 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இதனால் ஆட்டநாயகனாக பதீரனா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு விருதினை சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வழங்கினார். ஆட்டநாயகன் விருது வென்றது தொடர்பாக பேட்டியளித்த பதீரனா, சென்னை அணி தனக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், ரொனால்டோவின் தீவிரமான ரசிகர் என்பதால் அவரைப்போல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்