இறுதிப் போட்டியில் சிஎஸ்கே... நேப்பியர் பாலத்தில் தூய்மை பணியாளர்களுடன் உற்சாக கொண்டாட்டம்

x

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததை கொண்டாடும் விதமாக, தனியார் நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சி, உர்பேசர் ஸ்மித் என்ற தனியார் நிறுவனத்துடன் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை சேகரித்து வருகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து, அந்நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து நேப்பியர் பாலத்தில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்