தந்தையுடன் பைக்கில் சென்ற போது சிறுவனின் உயிரை பறித்த மாஞ்சா நூல் - கதறி அழும் தாய்

x

கர்நாடகாவில் காற்றாடியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி நகரில் தீபாவளிக்கு புத்தாடை வாங்க தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் 6 வயது சிறுவன் சென்றுள்ளான்.

அப்பொழுது காற்றில் பறந்து வந்த காற்றாடியின் மாஞ்சா கயிறு சிறுவனின் கழுத்தை அறுத்துள்ளது.

அதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கர்நாடகாவில் மாஞ்சா நூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்