சென்னையில் வீடியோ காலில் பேசும் போது பெண்ணுக்கு நடந்த கொடுமை

x

சென்னையில் வீடியோ காலில் ஆபாச படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ராஜா என்பவர் செல்போன் மூலம் அறிமுகமாகி, நெருங்கி பழகியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் உடல் பாகங்களை வீடியோ காலில் காட்டுமாறு கூறி, செல்போனில் படம் எடுத்த ராஜா, அவரை லாட்ஜ்க்கு அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதன்பின்னர் அப்பெண்ணின் அந்தரங்க படங்களை ராஜா சமூக வலைதளங்களில் வெளியிட, போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராஜா அந்த பெண்ணை தொடர்புகொண்டு அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை அழிக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டுமென மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகாரளிக்கவே, ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்