சாலையில் தேங்கி நிற்கும் கச்சா எண்ணெய் படலம்... தீ விபத்து, சாலை விபத்து ஏற்படும் அபாயம்

x

சென்னை ஆர்.கே.நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வெளியேறி தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும், தீ விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே தண்டையார்பேட்டையில் குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டு, சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் பிரச்னை உருவாகியுள்ளது.

குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் எண்ணெய் படலங்கள் தேங்கி நிற்பதால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயமும், தீ விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்