மர கிளையில் கொத்து கொத்தாக தொங்கிய ஒரு கோடி ரூபாய் பணம் - காங்கிரஸ் வேட்பாளரின் மாஸ்டர் பிளான்

x

கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டின் மரத்தின் கிளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மைசூரு நகரில் வசித்து வரும் சுப்பிரமணிய ராய் என்பவர், மங்களூரு நகர் புத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ராய்யின் உடன் பிறந்த சகோதரர். இவரது வீட்டில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து மைசூர் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள

மரத்தின் கிளையில் மாம்பழம் அடைத்து வைக்கப்படும் அட்டைப்பெட்டியில், ஒரு கோடி ரூபாய் அடைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்