கோடிக்கணக்கில் மோசடி...2-வது முறையாக சிக்கிய நியோ மேக்ஸ் நிறுவனம்

x

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், காளவாசல் அருகே உள்ள நியோ மேக்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து, சகாய ராஜா என நியோ மேக்ஸ் கிளை நிறுவனத்தை சேர்ந்த 4 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில், 2வது முறையாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட 100 புகார் மனுக்களில், 22 கோடி ரூபாய் வரை பணம் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இதுவரை பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்