வயல்வெளியில் விவசாயிக்கு ஷாக் கொடுத்த முதலை குட்டி

x

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோல்நாயக்கன்பட்டியில், வயல்வெளியில் சுற்றித்திரிந்த முதலை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.

விவசாயி அப்பு என்பவரது வயல்வெளியில் முதலை குட்டி சுற்றி திரிந்துள்ளார்.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 2 அடி நீளம் கொண்ட முதலை குட்டியை பத்திரமாக பிடித்து எடுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்