ஏழ்மையை அகற்றுவோம் என்பது காங்கிரஸின் வெற்று முழக்கம்" கர்நாடக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி விமர்சனம்

x

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஹம்னாபாத், விஜயபுரா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார், அப்போது, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்கள் என அனைவருக்கும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி பாஜகதான் என்று மோடி குறிப்பிட்டார். ஆனால் பட்டியலினத்தவர் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் அக்கறை கொண்டதில்லை என்றும், அவர்களை எப்போதும் அவமரியாதை செய்ததாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை,

ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெற்று முழக்கமாக மட்டுமே இருந்தது என்று கூறிய பிரதமர், காங்கிரஸ் கட்சியின் திட்டங்களால் உண்மையில் பயனடைந்தது அதன் ஊழல் தலைவர்களும் இடைத்தரகர்களும்தானே தவிர, ஏழைகள் அல்ல என்றும் கூறினார். பாஜக சமூகத்திற்கு சேவை செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சமூகத்தில் பிளவை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்