மனைவி கழுத்தை நெரித்த கணவர்.. சம்பவ இடத்திலே சரிந்து விழுந்து பலி -விசாரணையின் போது நடந்த பெரிய நாடகம்...

x
  • ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட மனைவியை, கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
  • ஆற்காடு அருகே தோப்புக்கனா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேட்டு.
  • இவருக்கு பானுமதி என்பவருடன் திருமணமாகி மிதுன்ராஜ், கார்த்திகேயன் என இரு குழந்தைகள் உள்ளன.
  • சேட்டுவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
  • மீண்டும் அதேபோல், குடும்பத்தில் பிரச்சினை ஏற்படவே, ஆத்திரமடைந்த சேட்டு, தனது மனைவி பானுமதியை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்.
  • இதில் நிலைகுலைந்த பானுமதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • பின்னர், ஒன்றும் தெரியாததுபோல், உடல்நிலை சரியில்லை எனக்கூறி, மனைவியை, அவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
  • அப்போது பானுமதியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, சேட்டு அழுது நாடகமாடியுள்ளார்.
  • இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
  • அதன் பேரில், கணவர் சேட்டுவிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.
  • அப்போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்