பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துகள் .... உரிமையாளர்களுக்கு போலீசார் வலைவீச்சு

x

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துகள் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார், தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் செங்கமலப்பட்டி மற்றும் தாயில்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துகளில், ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் செங்கமலப்பட்டி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து தொடர்பாக, தொழிற்சாலையின் மேலாளரையும், 2 போர்மேன்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொழிற்சாலை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர். அதேபோல் தாயில்பட்டி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து தொடர்பாக தொழிற்சாலை போர்மேனை கைது செய்துள்ள போலீசார், தொழிற்சாலையின் உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்