பாஜகவில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா... ஜார்க்கண்ட் ஆளுநராகும் நிலையில் பதவி விலகல்

x

பாஜக ஆட்சியை அண்ணாமலை தமிழ்நாட்டில் அமைத்துக் காட்டுவார் என்ற நம்பிக்கையில், கட்சியில் இருந்து விடைபெறுவதாக, சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ள அவர், அது தொடர்பான கடிதத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி விலகல் கடிதத்தை, கணத்த இதயத்தோடு ஏற்றுக் கொள்வதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்