கவரிங் கடைக்குள் புகுந்து தங்க நகைகள்..போலீசார் தீவிர விசாரணை

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் செயல்படும் கவரிங் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலையில் கடையை திறக்க ஊழியர் சென்ற நிலையில், ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலறிந்து போலீசார் சென்று சோதனை செய்ததில், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, தங்கநகை என்று கருதி கவரிங் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அடமானத்திற்காக வைக்கப்பட்ட 5 சவரன் தங்க நகைகளும், சில வெள்ளிப் பொருட்களும் திருடுபோனது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்