டீக்கடையை சூறையாடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் - குற்றாலத்தில் பரபரப்பு

x
  • குற்றாலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் டீக்கடையை சூறையாடி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியது.
  • சங்கர் என்பவர் குற்றாலத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இரவு நேரம் அனைவரும் கடையை அடைத்து விட்டு சென்ற நிலையில், கடை ஊழியர் ஒருவர் மட்டும் கடையில் படுத்து உறங்கியுள்ளார்.
  • அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் டீக்கடையில் புகுந்து அந்த ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
  • மேலும், அவரை மீட்க வந்த பொதுமக்களையும் தாக்கி கடையை சூறையாடியுள்ளார்.
  • இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கயிறு கட்டி அழைத்துச் சென்றனர்.
  • விசாரணையில் அந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்