பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.!!

x

அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளதாக வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மானாமதுரை பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதாகவும், இந்த பட்டாக்களை ரத்து செய்யகோரி பாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை தந்தால் அதிகபட்ச அபராதம் விதித்து மனு தள்ளுபடி செய்யப்படும் நீதிமன்றம் எச்சரித்தது.

ஒரு பொதுநல வழக்கில் ஒரு உத்தரவுதான் பிறப்பிக்க முடியும் என்றும், மீண்டும் மீண்டும் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்த வேண்டாம் என்றும் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்