#BREAKING || மேற்படிப்பு மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து, 19 மேற்படிப்பு மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள், 2 ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை அமலில் உள்ளது

தங்கள் படிப்புக்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி, 19 மேற்படிப்பு மருத்துவர்கள் வழக்கு

மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது, அதற்கு பிரதிபலனாக சமுதாயத்திற்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் - நீதிபதி


Next Story

மேலும் செய்திகள்