சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமின் கொடுத்து செக் வைத்த ஐகோர்ட்

x

ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஐாமின் கோரி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரித்தார். அப்போது நீதிபதி, அநாகரீகமாக பேசக்கூடாது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்