பள்ளி மாணவியை மிரட்டி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த தம்பதி - வீடியோவை லீக் செய்வதாக மிரட்டி பகீர்

x

தருமபுரி அருகே, 10ம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், அவரது மனைவி தெய்வானை ஆகிய இருவரும், வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தெரிந்தவர்கள் என்பதால் அந்த தம்பதியுடன் சென்ற மாணவியை, கொலை செய்துவிடுவேன் என தமிழ்செல்வன் மிரட்டி, ஆடைகளை கழட்டச் சொல்லியுள்ளார். மாணவியும் அச்சத்தில் ஆடைகளை கழற்றவே, அதனை தமிழ்ச்செல்வன் வீடியோவாக எடுத்துள்ளார். வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி, மாணவியை அவரது வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வருமாறு கூற, அச்சமடைந்த மாணவி 44 கிராம் நகைகளை தமிழ்ச்செல்வனிடம் எடுத்து வந்து கொடுத்துள்ளார். வீட்டில் நகை காணாமல் போன சம்பவம் பெற்றோருக்கு தெரியவரவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவியிடம் விசாரித்தபோது, நடந்த விவரங்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மனைவி தெய்வானையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்