அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை..தென்காசி தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு..Tenkasi |Counting

x

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் 370 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளில் குளறுபடி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகளில் 13சி என்ற படிவத்தை அதிகாரிகள் காண்பிக்க வேண்டும் என செல்வ மோகன் தாஸ் வலியுறுத்தியதால், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்