"பூமியில் பதுக்கப்பட்ட கள்ளச்சாராயம்" - 40-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கள்ளச்சாராயம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான, பெருக்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தி 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில், ஓதியூர் சூனாம்பேடு பகுதியில், 40-க்கும் மேற்பட்ட போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்