கள்ள நாட்டு துப்பாக்கிகள்- வனத்துறையினர் அதிரடி எச்சரிக்கை

x

கிருஷ்ணகிரியில் கள்ள நாட்டு துப்பாக்கிகளை தாங்களாக முன்வந்து ஒப்படைக்கக் கோரி கிராம மக்களிடம் நோட்டீஸ் வழங்கி தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஓசூர் கோட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

ஜவளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வனத்துறையினர் பேரணி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அத்துடன் 10 நாட்களுக்குள் ஒப்படைக்கா விட்டால் மோப்ப சக்தி மிக்க நாய்களை கொண்டும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் சோதனை செய்து கள்ள நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்