“வெயிலை சமாளிக்க முடியல..“ - “அதான் ஏசி-ஐ திருடினேன்“ - போலீசார் விசாரணையில் சிரிப்பலை

x

குபேரன் நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன். இவரது வீட்டின் வெளிப்புற சுவற்றில் மாட்டியிருந்த ஏசி இயந்திரம் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ஏசியின் வெளிப்பாகத்தை மட்டும் கழற்றி திருடியது துரைப்பாக்கத்தை சேர்ந்த சலீம் மற்றும் மோகன கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தி விசாரணையில் கோடை வெயிலில் தாக்கத்தை சமாளிக்க முடியாத நிலையில், ஏசியை நோட்டமிட்டு திருடியதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்