கொரோனா பரவல் - சபரிமலை பக்தர்கள் நிலை என்ன ?

x

கொரோனா தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை எனவும் சபரிமலை தரிசனம் குறித்து தற்போது எந்த கவலையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்