கொரோனா குறித்த அதீத பயத்தால் அவலம்... கணவனை வெளியே தள்ளிய பயம்.. 3 ஆண்டுகள் முடங்கிய தாய்,மகன் வாழ்க்கை

x
  • கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே அலறவிட்ட கொரோனா, தனது கொடூர குணத்தை சற்று தணித்திருப்பதாக, பொதுமக்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்... இந்நிலையில், அரியானா மாநிலத்தில் நடந்த சம்பவம், கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது...
  • குருகிராம் அடுத்த சக்கர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் மாஜி. தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றும் இவர், சக்கர்பூர் காவல்நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை பதிவு செய்தார்...
  • அந்த புகாரில், தனது மனைவி கொரோனா பரவல் குறித்து அதீத பயத்தில் இருப்பதாகவும், வீட்டைவிட்டு வெளியே சென்றால், தனது மகன் இறந்துவிடுவார் என கருதி, மூன்று ஆண்டுகளாக பூட்டிய வீட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்....
  • இதைக் கேட்டு திடுக்கிட்ட போலீசார்... பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, சுஜன் மாஜியின் மனைவி மற்றும் மகனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
  • முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, அலுவலகத்திற்கு சென்ற அவரது கணவரைக்கூட வீட்டிற்குள் அனுமதிக்காத அப்பெண், கேஸ் இல்லாததால் இன்டக்க்ஷன் அடுப்பில் சமைத்து வந்துள்ளார்...
  • வீட்டின் மாதாந்திர வாடகை, மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்திவந்த கணவர் மாஜி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வீட்டின் கதவு அருகே வைத்து வந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வீடியோ கால் மூலமே, மனைவியை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
  • போலீசார் நடத்திய ஆய்வில், ஆடைகள், மளிகைப்பொருட்கள் மற்றும் குப்பைகளை வீட்டின் மூலையில் குவித்திருந்த அந்த பெண், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விட்டதும் தெரியவந்தது.
  • மீட்கப்பட்ட சிறுவன், மூன்று ஆண்டுகளாக சூரியனைக்கூட பார்க்காத நிலையில், சுவர்களில் படம் வரைவதை மட்டும் பொழுதுபோக்காக கொண்டிருந்ததும், தெரியவந்தது.
  • இந்நிலையில், மீட்கப்பட்ட பெண்ணிற்கு மனநல பரிசோதனை மேற்கொள்ள, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
  • கொரோனா விதிகளை மதிக்கவில்லை என பொதுமக்களை அரசு எவ்வளவோ குறைப்பட்டுக் கொண்டது.
  • ஆனால், ஓவராக மதித்தாலும் ஆபத்துதான் எனக் காட்டிவிட்டது இந்த அசாதாரண சம்பவம்..!

Next Story

மேலும் செய்திகள்