பீகார் வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதி | bihar | corona

x

பீகாரில் 4 வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கயா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்புள்ள அனைவரும் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் இங்கிலாந்து நாட்டில் இருந்தும், ஒருவர் மியான்மரில் இருந்தும் வந்துள்ளதாகவும், தகவல் வெளியான நிலையில், விசாரணையில், மதத் தலைவர் தலாய் லாமாவின் போதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர்கள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் புனித போதனை நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. எனவே விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்