அதிகரிக்கும் கொரோனா பரவல்-வழக்கறிஞர்களுக்கு நீதிபதி போட்ட உத்தரவு..!

x

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நேரடி விசாரணையுடன் காணொலி வாயிலான விசாரணையிலும் பங்கேற்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வில் ஏராளமான வழக்கறிஞர்கள் குழுமியிருந்தனர். அவர்களை பார்த்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே காணொலி விசாரணையை பயன்படுத்தும்படி அறிவித்துள்ளதாக கூறினார். எனவே நீதிமன்ற அறைக்கு வருவதை தவிர்த்து காணொலி முறையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார். நான்கைந்து நீதிபதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியபட்டுள்ளதாக தெரிவித்ததுடன், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்