கொரோனா BF.7.. தமிழக விமானநிலையங்களில் இன்று முதல் | Corona Test | Airport

x

BF 7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி துவங்கியது.

சீனா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. விமான பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்கள் 2 கொரோனா தடுப்பூசிகளும் போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்